Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

வெள்ளி, 5 ஜூன், 2009

வி. பி.எல்.,

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை வி. பி.எல்., என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நான்கு பேர் அமர்ந்து கொண்டு போடும் மொக்கை இருக்கிறதே........அடேயப்பா.......அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.இதில் ஒரு மிகப் பெரிய கொடுமை சில புண்ணியவான்கள் வேறு போன் போட்டு கருத்துக் குத்தைக் குத்துகிறார்கள்.
அந்த நாலு பேர்..................
பாஸ்க்கி...........இவர் தான் பரமார்த்த குரு..........கடி ஜோக்குகளுக்கு இவர் ஏற்கனவே பேர் போனவர்.கூட இருக்கும் மூன்று பேரை சமாளித்த படியே உளறுவது தான் இவர் வேலை.தினமும் திருப்பதி போய் வந்த மாதிரியே இவர் மண்டை இருக்கிறது.

நாணி............இவருக்கு தான் தான் உலகத்திலேயே அதி புத்திசாலி என்கிற நினைப்பு.இவர் யார் எந்தக் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.இவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி. இவர் சொல்லும் இல்லை உதிர்க்கும் சொல் முத்துக்கள் இருக்கிறதே வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.அவர் உதிர்த்தத்தில் ஒரு சிறிய முத்து......
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை அப்பா பேச்சைத் தான் கேட்க்க வேண்டும் பின் கணவன் சொன்ன சொல்லை மட்டும் கேட்டு பணிந்து அடங்கி நடக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு நல்லது.எப்பூடி.........................

நீலு........இவர் ஒரு சீனியர் நாடக மற்றும் சினிமா நடிகர்.இவருக்கு தற்ப்போது ஏழரை சனி நடக்கிறது போல.இங்கே வந்து மாட்டிக் கொண்டு விட்டார்.அருகிலிருக்கும் ஒருவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே இவருக்கு நேரம் போய் விடுகிறது.பாவம்....................

கடைசியாக ஒரு ஆங்கில அகராதி இவர் பேர் தெரியவில்லை.இவர் ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என்று போடும் மொக்கை இருக்கிறதே........நிகழ்ச்சி துவங்கும் முன் வாய் நிறைய Blade -ஐ முழுங்கி விட்டு வந்து கடித்துத் துப்புகிறார் மனுஷன்.

கலைஞர் டி.வி.யினர் ஒன்று இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் அல்லது இந்த மொக்கை மன்னார் சாமிகளையாவது மாற்ற வேண்டும். செய்வார்களா?.........

கருத்துகள் இல்லை: