Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

திங்கள், 16 நவம்பர், 2009

சாமிப் பாட்டு!................

ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த விஷயம் திடீரெனத் தோன்றியது!

சாமிப் பாட்டு, அதாங்க பக்திப் பாடல்கள்…..வினாயகர் பாட்டு,முருகன் பாட்டு,சிவன் பாட்டுன்னு பாத்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட குரல் தான் அந்தந்த சாமிக்கு மேட்ச் ஆகுது.

எ.கா.வினாயகர் பாட்டுன்னா சீர்காழி,முருகன் பாட்டுன்னா TMS,அம்மன் பாட்டுன்னா L.R.ஈஸ்வரி.இதே சாமிக்குப் பலரும் பாடியிருக்காங்க ஆனாலும் ஏனோ இவங்க பாடுன பாட்டு தான் பயங்கர ஃபேமஸா இருக்கு!......இன்னிக்கும் பாருங்க ஊர்க் கோயில்ல,தெருவுல,கம்பெனியிலன்னு எங்க கல்யாணம், திருவிழா,பூஜைன்னு எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் வினாயகனே!.............................……………ன்னு அய்யா
சீர்காழி தான் ஆரம்பிப்பாரு,அழகென்ற சொல்லுக்கு முருகான்னு TMS அடுத்து வருவாரு அது முடிய உடனே செல்லாத்தான்னு……..ஈஸ்வரி அம்மா அப்படியே சாமியாட வச்சிருவாங்க!......

சீனியர்ஸ் எல்லாம் மெதுவாப் போனதும் பணிவா வருவாரு நமசிவாயா……. நமசிவாயா……… ஓம்நமசிவாயான்னு……..நம்ம SPB.
இப்பவும் சுப்ரபாதம்,விஷ்ணு சஹஷ்ரநாமம்னா எம்.எஸ்.அம்மா தான்!.........சஷ்டி கவசமா சூலமங்கலம் சகோதரிகள் மட்டும் தான்!.........

எவ்வளவோ பேர் இந்த கடவுள்களைப் பத்திப் பாடியிருந்தாலும் ஏன் அவங்கள்ளாம் பாப்புலராகலை?........அவங்க குரல் ஏன் மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு?.......

நீங்க என்ன நினைக்கிறீங்க?.................