Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

சனி, 15 மே, 2010

அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லது!

அக்ஷய திரிதியை அன்னைக்கி தங்கம் வாங்குனா ரொம்ப நல்லதாம்!....அதுலயும் வெண் தங்கம் பிளாட்டினம் வாங்குனா ரொம்ப ரொம்ப நல்லதாம்!....டி.வி.க்கள் ,பத்திரிக்கைகள் எல்லாம் அலறுது!.....அன்னைக்கி தங்கம் வாங்குறவங்க அந்த வருஷம் பூரா வாங்கிட்டே இருப்பாங்களாம்!.....அன்னைக்கி தங்கம் வாங்கினா செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல,தங்க நாணயம் இலவசம் வேற!...அடப் பாவிங்களா உங்க மூடத் தனத்துக்கு ஒரு அளவே இல்லியாடா?.....

பல ஜோசியர்கள் இதுக்கு கியாரண்டீ வேற குடுக்குறாங்க!...தயவு செஞ்சு வாங்குங்கன்னு கெஞ்சுறாங்க!..எல்லாம் நம்ம மக்கள் நல்லா இருக்கணும்ங்கிற நல்லெண்ணம் தான்!...ஒரு 100 வருஷத்துக்கு முன்னால கல்வி,ஜோதிடம் இதெல்லாம் தொழில் கிடையாது!ஒரு பையன் படிக்கணுன்னா வாத்தியார் வீட்ல போய் தங்கித் தான் படிக்கணும்!நோ ஃபீஸ்!ஆனா அதுக்குப் பதிலா குருவோட வீட்ல எல்லா வேலையும் செய்யனும்!..பையன் தேறிட்டான்னு வாத்தியார் நினைச்சா பையனோட அப்பாவுக்கு தாக்கல் அனுப்புவாரு!..அவரும் வந்து ஏதோ தன்னால் முடிஞ்சதை தட்சணைன்னு சொல்லிக் குடுத்துட்டு தன் பையனைக் கூட்டிக்கிட்டுப் போவாரு!

அதே போலத் தான் ஜோதிடமும்!..ஜோசியர் இவ்வளவு வேணும்,அவ்வளவு வேணும்னு யார்கிட்டயும் கேக்க மாட்டாரு!..பாக்க வற்றவங்க குடுக்குறதை சந்தோஷமா வாங்கிக்குவாரு!...ஆனா இப்போ?.........ஜோதிடர், வீட்ல போர்டே வச்சிருக்காரு ஹோட்டல் ரேஞ்சுக்கு!....திருமணப் பொருத்தம் பார்க்க...ஜாதகம் கணிக்க,பலன் சொல்லன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட்!...பரிகாரப் பூஜை பண்றேன்ணு இவனுங்க அடிக்கிறானுங்க பாருங்க ஒரு கொள்ளை!.......தெஹல்காவுக்கே சவால் தான்!....இவனுங்க கழுத்துல பாத்தீங்கன்னா ருத்ராக்ஷம்,துளசி,ஸ்படிகம்னு எல்லா ரகத்துலயும்,எல்லா டிசைன்லயும் ஒரு மாலைப் போட்ருப்பாங்க!...அப்பத் தான் நம்ம நம்புவோமாம்!.....

கடவுளை நம்பலாம்!....ஆனால் நான் தான் கடவுள் என்பவனை நம்பக் கூடாது!...
போலவே,ஜோதிடத்தைக் கூட நம்பி விடலாம்!..ஆனால் நான் தான் ஜோதிடன் என்கிறார்களே இவர்களை மட்டும் தயவு செய்து நம்பி விடாதீர்கள்!...

ஆகவே அக்ஷய திரிதியை என்பது ஒரு நல்ல நாள் அவ்வளவு தான்!..அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் வியாபாரிகள் அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை!...அவ்வளவே!..

ஞாயிறு, 9 மே, 2010

ஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்!.......

இன்றைக்கு அம்மாக்கள் தினமாம்!....அதுவும் சரி தான்!இதை சாக்காக வைத்தாவது நம் அம்மாவுக்கு ஏதேனும் செய்யலாமே!சின்னதாய் தாங்க்ஸ் சொன்னாலே போதுமே அவள் குளிர்ந்து போவாளே!..

கருவுற்றிருக்கும் போது என் மனைவியை அருகிலிருந்து பார்த்தவன் என்பதால் ஒரு தாயின் வேதனைகளும் வலிகளும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்!...நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உணவகத்தில சாப்பிட்டிக் கொண்டிருந்தேன்!என் பக்கத்தில் கனவன்,மனைவி அவர் தம் 2 வயது குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்!..குழந்தைக்காக இட்லியும்,அவர்களுக்கு பூரியும் தோசையும் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது!..ஆனால் அந்தக் குழந்தை இட்லியை சாப்பிடுவதற்குள் அவர்களைப் படுத்திய பாடு இருக்கிறதே?....அழுது,தன்ணீர் டம்ளரைத் தள்ளி விட்டு,வாயில் உள்ளதை அம்மாவின் மேல் துப்பி என ரகளை தர்பாரே நடத்தி விட்டது!...ஆனால் அந்தத் தாய் குழந்தை சாப்பிட்ட பின்னரே சாப்பிட்டார்!..தன் குழந்தை பசியோடு இருக்கையில் ஒரு தாய் உண்ண மாட்டாள் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது!....

என்னை விட 5 வயது மூத்த என் நண்பர் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவர் அடைந்த டென்ஷனையும்,பின் குழந்தை பிறந்ததும் அடைந்த இன்பத்தையும் கண்ட போது என் பெற்றோர்கள் மீது அளப்பறிய ஒரு உணர்வு ஏற்பட்டது!...அப்போது ஒரு முடிவெடுத்தேன் என் பெற்றோர்கள் அவமானப் படும் படியாகவோ,தலை குனியும் படியாகவோ எந்த ஒரு செயலையும் செய்யக் கூடதென!...முடிந்த வரை அவர்கள் மனம் மகிழ்வுறும் வண்ணமே நடந்து வருகிறேன்!...என் அப்பாவுக்குக் காதல்,கலப்புத் திருமணம் என்றாலே பிடிக்காது!..இதற்காகவே என்னைத் தேடி வந்த இரு காதல்களை வேண்டாம் என்றிருக்கிறேன்!...எனக்கு என் பெற்றோர்கள் தான் முக்கியம் என் காதல் அல்ல!....

ஆனால் எனக்கு என் அம்மாவின் மேல் ஒரு சிறு வருத்தம் உண்டு!...அவளுக்கு சேமிப்பு,திட்டமிடுதல்,சொத்து சேர்த்தல் என்பதெல்லாம் தெரியாது!...அதனால் எங்களுக்கும் சொல்லித் தரவில்லை.எங்கள் அப்பா நிறைய சம்பாதித்தது போல் இருக்கிறது!...ஆனால் சொத்து என்று எதுவும் இல்லை.காரணம் என் தாய் என்பேன்!...

“ சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப்
போடு செல்லக்கண்ணு! - அவ ஆறை நூறு ஆக்குவாடா சின்னக்கண்ணு!”
என்ற வாக்கு என் தாயிடம் செல்லாது!.....ஆறை நூறாக்க வேண்டாம் பத்தாகக் கூட ஆக்கத் தெரியாது அவ்வளவு வெகுளி!இன்றும் அப்படித் தான் இருக்கிறாள்!என் மனைவியும் இதைத் தான் சொன்னாள்!...அதை என் அம்மாவிடமும் சொல்லி விட்டாள்!.....அதற்கு என் அம்மா,”ஆமாண்டி எங்க அம்மா என்னை அப்படி வளத்துட்டாங்க என்றிருக்கிறார்!..என்ன சொல்ல?....

ஆனாலும் எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்!.......