Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

ஏன் இப்படி?..........

மிக நல்ல திறமை இருக்கிறது.........லட்சக்கணக்கானோர் பாராட்டி விட்டார்கள், பாராட்டுகிறார்கள், பாராட்டுவார்கள்!...........
இவர் படம் தாங்கிய எல்லாவற்றுக்கும்/எவற்றுக்கும் ஒரு சிறப்பு மரியாதை இருக்கும்!........
இவர் தயவால் புகழும் பணமும் அடைந்தவர்கள் ஏராளம்!....
இருபது வருட காலம் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியவர்.................
எல்லாம் இருக்கிறது.........ஆனால்..............இன்னும் இவருக்கு ஏனோ உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை!......
இவருக்கு சமமான இவருக்குப் பின் வந்த ஒருவருக்கு அந்த உலக அங்கீகாரம் கிடைக்கும் போது இவர் மனம் என்ன நினைத்திருக்கும்...........?
உள்ளம் நிச்சயம் கொஞ்சமாவது பொறாமைப் பட்டிருக்கும்.......கண்ணீர் சிந்தியிருக்கும் ..... ! கோபம் கொண்டிருக்கும்.........!
அப்படி செய்வது நிச்சயம் சரியே........அந்த நிலையில் இருப்பவருக்கே அந்த வலியும் வேதனையும் புரியும்!..............
வேடிக்கை பார்க்கும் நமக்கு தான் அது செய்தியே தவிர அந்த இதயத்துக்கு அல்ல!..
துன்பம் வரும் வேளைகளில் வள்ளுவன் சொன்னதை போல் நாங்கள் சிரித்ததில்லை ஆனால் உன் பாட்டைக் கேட்டிருக்கிறோம்!..உனக்கே அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது!.......
உன் இசையை உச்சரிக்கும் உதடுகள் இருக்கும் வரையில் உனக்கு மரணமில்லை!....வெள்ளைக்காரன் தராவிட்டால் என்ன........உன் தமிழன் நாங்கள் தருகிறோம் 1000 ஆஸ்கார்கள்......!

இசை ஞானியே..................ஓங்கட்டும் உனது புகழ்!.........


4 கருத்துகள்:

கொடும்பாவி-Kodumpavi சொன்னது…

அவர் இசை ஞானிங்க. அவருக்கு ஆஸ்கர் விருது கொடுத்து ஒரு வட்டத்திற்குள் போடக்கூடாது. அவர் இசையை தன் வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கழுதைகளுக்கு கற்பூற வாசனை தெரியாது. அவர் காலத்தில் வாழ்வதே நம் பேறு. அவரையும் ரஹ்மானையும் நாம் ஒரே தராசில் வைக்க முடியாது. ரஹ்மானின் இசை வேறு, இசை ஞானியின் இசை வேறு.

பெயரில்லா சொன்னது…

தமிழ் சினிமாவின் ஒரே ஒரு ஜீனியஸ் நம்ம இளையராஜா அவர்கள் மட்டும் தான்..... விருதுகள் அவர்கள் கொடுக்க விட்டால் என்ன???.... ராஜா இசையை மக்கள் எப்போதும் விரும்பி தான் கேட்டார்கள்...கேட்கிறார்கள்.. கேட்பார்கள்... இதுவே பெரிய விருது அல்லவா????... சமீபத்தில் நான் கடவுள் பார்த்த ஒரு நண்பர் இப்படி கூறினார்.... இளையராஜா போல இசை அமைக்க இன்னொருவர் பிறந்து வர வேண்டும்..... உண்மையான சொற்கள்.... சரி தானே????

கொடும்பாவி-Kodumpavi சொன்னது…

பிஸியா..? பிப்ரவரிக்கு அடுத்து மார்ச் .. மார்ச் செஞ்சி போயிடுச்சு இப்ப ஏப்ரல் நடக்குது.. ஏதாவது எழுதி ‘உள்ளேன் ஐயா' சொல்லுங்க..

கார்க்கிபவா சொன்னது…

ராஜா
ராஜாதி ராஜன் இந்த ராஜ...