Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

புதன், 25 மே, 2011

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்.....

ஒரு பங்களா வீட்டு நாயும் தெரு நாயும் பேசிக்கிட்ருந்திச்சி!.....

தெரு நாய் : என்னப்பா எப்படி இருக்கே,வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது?....

பங்களா நாய்:நமக்கென்னப்பா சுகம்மா போகுது......மட்டன்,முட்டை,பிஸ்கேட்டுன்னு .....
உனக்கெப்படி.......

தெ.நா: நாளொரு தெரு, பொழுதொரு குப்பத் தொட்டின்னு பொழப்பு ஓடுது!.....

ப.நா: சுகமான வாழ்க்கப்பா உனக்கு.....

தெ.நா:உனக்கென்னப்பா குறைச்சல்.....நல்ல சொகுசா நிழல்ல இருக்கே.......நேரத்துக்கு சாப்பாடு போட்டு,நோவுன்னா மருந்து குடுத்து முதலாளி நல்லா தான வச்சிருக்காரு!..

ப.நா:அடப் போப்பா எல்லாம் கேக்க நல்லா இருக்கும் ஆனா எப்போப் பாரு கட்டிப் போட்டே வச்சிருக்காங்கே......நாலு தெருவுக்குப் போனோம் நாலு நாய்ங்களைப் பாத்து சைட் அடிச்சோம்னு இருக்கா.....என்னதான் இருந்தாலும் தெருநாய் வாழ்க்கை போல வராதுப்பா!.....

தெ.நா:அப்போ எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்துர்றியா?.......

ப.நா: வரலாம் தான்....ஆனா.......

தெ.நா:என்ன ஆனா?......

ப.நா:இந்த வீட்டு முதலாளி சொன்ன ஒரு வார்த்தை தான் என்னைத் தடுக்குது......

தெ.நா:என்ன சொன்னாரு உன் முதலாளி.....நீ இல்லேன்னா செத்துப் போய்டுவேன்னாரா?..

ப.நா:இல்லப்பா இவருக்கு ஒரு பொண்ணு இருக்கா,சும்மா சினேஹா மாதிரி செமையா இருப்பா!....

தெ.நா:சேரி........

ப.நா:அவளுக்கு ஜாதகத்துல ஏழாம் வீட்ல ராகுவாம் அதனால கல்யாணத்துல ஏதோ தோஷம் வருமாம்....அப்பா சொல்றாரு!ஆனா சினேஹா சொல்லுது ஏழாம் வீட்ல ராகு இல்ல ரகு தான் இருக்காரு நன் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு......

தெ.நா:சரி தானேப்பா........

ப.நா:ஆனா முதலாளி கண்டிசனா சொல்லிட்டாரு.....அதான் யோசிக்க வேண்டியது இருக்கு.....

தெ.நா:என்னப்பப் போட்டுக் குழப்புற.....அப்படி என்ன தான் சொன்னாரு உன் முதலாளி ?...

ப.நா:இல்ல......இந்த நாய்க்கு வேணாக் கட்டிக் குடுப்பேன் ஆனா அந்த ரகுவுக்குக் கட்டிக் குடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு........அதான் கொஞ்சம் வெய்ட் பண்றேன்.....

தெ.நா:டேய்.......அந்தப் பொண்ணு நினைக்குறது ஆசை.......ஆனா நீ படுறியே அது பேராசைடா .......

15 கருத்துகள்:

Sridhar சொன்னது…

NICE! Enjoyed the finishing touch.

Lusty Leo சொன்னது…

ரவி, யாரு கண்டது? இந்தக் காலத்துல அந்த மாதிரி நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா பேராசையோ பேராசை, போயும் போயும் ம்ஹும் சினேகா மாதிரி பொண்ணு மேல ஆசையா...?

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

Thanks Sridhar.....

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ & பிரசன்னா!.....

rajamelaiyur சொன்னது…

Super joke. . . I like very much . .

rajamelaiyur சொன்னது…

I am the new visitor of your blog

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

Yes,Warm Welcome Raja.......
Visit frequently....

மாலதி சொன்னது…

very nice

Sadhu சொன்னது…

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

kowsy சொன்னது…

கதை வேறு மாதிரி போகும் என்று நினைத்தேன். கடைசியில் என்னையறியாமலே என் இதழ்கள் சிரிப்பை உதிர்த்தன. வாழ்த்துகள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

சபாஷ் ரவி.

Vijayakrishnan சொன்னது…

Very nice Ravi....

கொடும்பாவி_kodumpavi சொன்னது…

ரவி,
நல்லா தான் எழுதறீங்க.. உங்க நோக்கமும் ரொம்ப பாராட்ட பட வேண்டியதுதான். செந்தமிழ் க00(100) இப்படி போட்டிங்க என்ன மாதிரி உள்ளவங்களுக்கும் உதவியா இருக்கும்.. அப்புறம் அதுவே பழகி எல்லாரும் தமிழ் எழுதுவாங்க..
என்னை மாதிரி இல்லாம ஒரு வாரத்திற்கு ஒரு பதிவேணும் பதிவிடுங்க..

சமுத்ரா சொன்னது…

:> too much