Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

திங்கள், 20 செப்டம்பர், 2010

எல்லாம் நம்ம தலை எழுத்து!.....

எல்லாம் நம்ம தலை எழுத்து!.....

நேரமே சரி இல்லங்க!...

நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான்!..

இந்த டயலாக்குகளை நாம் அடிக்கடி சொல்லி இருக்கிறோம் அல்லது கேட்டிருக்கிறோம்!...

எல்லாமே நம் தலை விதிப்படி தான் நடக்கிறதா?....இல்லை எல்லாமே நம் கையில் தான் இருக்கிறதா!?....இதைப் பற்றி தான் நேற்று விஜய் டிவியில் நீயா நானா என்று சண்டை போட்டார்கள்!.....

இது ஒரு முடிவில்லாத தர்க்கம்!..இது தான் சரி என்று சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாத வாதம்!..இரண்டு தரப்பிலும் இளைஞர்கள் இருந்து வாதிட்டது சிறப்பு!..

வள்ளுவர் கூட இந்த விசயத்தில் கொஞ்சம் குழம்பி இருக்கிறார்!..அதனால் தான் "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்றவர் பின்னர் "ஊழிற் பெரு வலி யாவுள" என மாறி விட்டார்!..

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும்,தீமையும் கலந்தே இருக்கிறது!....அது கறந்த பாலாக இருந்தாலும்,அன்னையின் அன்பாக இருந்தாலும்,சாலை விபத்தாய் இருந்தாலும் இரண்டு குணங்களும் கலந்தே இருக்கிறது.

எனவே நன்மை, தீமை இதில் எது அதிகமோ அதை வைத்தே அந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்!..உதாரணத்திற்கு ஒரு சாலை விபத்தையே எடுத்துக் கொள்வோம்!..விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார்!.அவருக்கு மிக இளம் வயது!1 வயதில் ஒரு குழந்தையும்,மனைவியும் இருக்கிறர்கள் என வைத்துக் கொள்வோம் அந்த விபத்து மிகக் கொடியது!..ஆனால் இறந்தவர் பெரும் வியாதியஸ்தர்!..எவ்வளவோ செலவழித்தும் குணமாகாதவர் என்றால் அந்த விபத்தும் நல்லதே இல்லையா?..

அதே போல இந்த விதியையும் எடுத்துக் கொள்வோம்!..நாம் செய்ய வேண்டிய நியாயமான எல்லா முயற்சிகளையும் செய்வோம்!..கிடைத்தால் நல்லது!.இல்லையா விதியின் மேல் பழியைப் போட்டு விட்டு வேறு வேலை பார்க்க போய் விடலாம்!..இது விதியை நம்புபவர்களுக்கு!

ஆனால் விதியை நம்ப மாட்டேன்!..எல்லாம் என்னால் முடியும் என்று சொல்பவர்கள் தான் சந்திக்கும் தோல்விகளை அவ்வளவு எளிதில் புறம் தள்ளி விட மாட்டார்கள்! மாறாக அதிலேயே சிக்கி உழல வேண்டி இருக்கும்!...

எனவே இந்த விதியைப் பற்றி மிகவும் அலட்டிக் கொள்ளாமல் நமக்கு வேண்டும் போது மட்டும் பயன்படுத்தி விட்டு மற்ற நேரங்களில் அதைப் பற்றி கவலைப் படாமல் இருப்பதே புத்திசாலித் தனம்!...

சரியா?.......

கருத்துகள் இல்லை: